தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் திரையுலகினரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி.க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சுந்தர் சி முழுவதுமாக குணமாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குஷ்பு ட்விட்டரில் :

நண்பர்களே, உங்களின் பிராத்தனைக்கு பதில் கிடைத்துவிட்டது. என் கணவர் சுந்தர் சி. மருத்துவமனையில் இருந்து வந்துவிட்டார். ஆனால் அவர் அடுத்த 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறார். தற்போது அவர் எங்களின் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கிறார். அதனால் 7 நாட்கள் கழித்து தான் நான் அவரை பார்க்க முடியும். உங்களின் ஆதரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.