சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்நடிப்பில் உருவாகும் படம் ‘புஷ்பா’ .

‘புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் தயாராகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஏப்ரல் 8 அல்லு அர்ஜுன் பிறந்த நாள் என்பதால், இந்தப் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

செம்மர கடத்தல் பற்றிய சர்ச்சையான கதையை தான் இயக்குனர் சுகுமார் கையில் எடுத்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மெயின் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது . இருப்பினும் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திமும் நெகடிவ் ஷேட் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.