சென்னை:
மிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களாக தலைவர் ராகுல்காந்தியின் கொங்கு மண்டல சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.


செல்லும் வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக கூடிநின்று மகிழச்சிப் பெருக்கோடு வரவேற்றனர். ஏழை, எளிய மக்கள் அன்பை பொழிந்தனர். மக்களின் வரவேற்பை மனமுவந்து தலைவர் ராகுல்காந்தி ஏற்றுக் கொண்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நேரு பாரம்பரிய தலைமையை கடந்த காலங்களில் எப்படி ஏற்றுக் கொண்டு அன்பை வெளிப்படுத்தினார்களோ, அதைப் போலவே தலைவர் ராகுல்காந்திக்கும் ஆதரவை வழங்கினார்கள் என்பதை அவரது சுற்றுப் பயணம் உறுதி செய்தது.

தலைவர் ராகுல்காந்தியின் சுற்றுப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உறுதி செய்கிற வகையில், மக்களின் வரவேற்பு அமைந்திருந்தது. மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சிக்கு எதிராகவும், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கும் தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் என்பதை ராகுலின் கொங்கு வணக்கம் உறுதி செய்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.