சென்னை,

டப்பாடி தலைமையிலான அரசுக்கு  கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்எக்கள் கவர்னரிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. இதன் காரணமாக டிடிவி தினகரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

அந்த கடிதத்தில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அதுபோல நாங்களும் நம்பிகையை இழந்து விட்டோம்.

எனவே தமிழக முதல்வரை மாற்ற வேண்டும்  என்று தனித்தனியாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்ற எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை இழந்த தீர்மானத்தின்மீது நாங்கள் அவருக்கு ஆதரவு அளித்தோம்.

ஆனால், தற்போது எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை முதல்வர் எடப்பாடி இழந்து விட்டார் என்றும்,

இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக கூறியுள்ளனர்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் எடப்பாடி மீது குற்றச்சாட்டை கூறி தனித்தனியாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

எடப்பாடிக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில்,திமுகவும் அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தால், தமிழக அரசு மீண்டும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதில் ஐயமில்லை.