சென்னை:

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளில் கைது நடவடிக்கைகளை பொன்.மாணிக்கவேல் செய்ய கூடாது, அதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்றும் கூறி உள்ளது.

மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம் என்றும்,  பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு தீர்ப்பு  வழங்கி உள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் ஒய்வு பெற்றதை தொடர்ந்து, அவரை சிலை கடத்தல் வழக்கின்   சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளில் கைது நடவடிக்கைகளை எடுக்க பொன் மாணிக்கவேலுக்கு அதிகாமில்லை என்றும்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம் என்று உத்தரவிட்டுள்ளது.