சென்னை,

ல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கைவிரித்துவிட்டது.

இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசும், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெறும் என்று வார்த்தை ஜாலத்தால் மக்களை ஏமாற்றிவந்தது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீருவோம் என்றும் தமிழக அரசியல் கட்சியினரும், ஜல்லிக்கட்டு தடையை உடனே நீக்க வேண்டும் என்று தமிழக இளைஞர்களும் மட்டுமின்றி,  தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இன்றே தமிழகத்தில் பல இடங்களில் சீமான் கட்சியினர் ஜல்லிக்கட்டு போட்டியை தடையை மீறி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சியினர் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்….

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின்:

ஜல்லிக்கட்டு போட்டியை  நடத்த பிரதமர் மோடியை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும். இல்லையெனில் தமிழக மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் ராமதாஸ்:

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க வாய்ப்பில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. ஆகையால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனால் அதற்கு கையாலாகாத தமிழக அரசும், துரோகம் செய்யும் மத்திய அரசும் தான் பொறுப்பு.

ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனைத்து மக்களும் ஆதரவு தருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவசர சட்டம் கொண்டுவர முடியாது என மத்திய அரசு கூறுவது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயல்.  இது வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் அவசர சட்டம் கொண்டுவந்த முன்னுதாரணங்கள் உண்டு. ஆகையால் மத்திய அரசு அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்.

முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறாவிட்டாலும் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் விதமாக மத்திய அரசு செயல்படுகிறது. காவிரியில் தண்ணீர் கிடைத்திருந்தால் விசாயிகளுக்கு இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டு இருக்காது.

அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் :

சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய அறிவிப்பு  மத்திய அரசின் தோல்வியைக் காட்டுகிறது. அவசரச்சட்டம் ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வாருங்கள் என்று தமிழக முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் மத்திய அரசுக்கு கடிதம் அளித்தார்கள்.

அதற்கு மதிப்பளித்தாவது அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.அப்படி கொண்டு வந்திருந்தால் இப்படி ஒரு ஆபத்தான பொறியில் சிக்கி இருக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது.

லட்சக்கணக்கானஇளைஞர்கள் இந்த செய்திக் கேட்டு கொதிக்கிறார்கள். ஒரு அறிவிக்கப்படாத போர் தமிழர்களின் மீது தொடுக்கப்பட்டது போல் உள்ளது.

உடனடியாக குடியரசுத்தலைவரை சந்தித்து அவசரச் சட்டம் போட்டு நாளையே நடைமுறைப் படுத்துவதற்கு முன் வராவிட்டால் மத்திய அரசிடம் இருந்து தமிழகம் அன்னியமாகிவிடும் என்றுஎச்சரிக்கிறேன்.

கசப்பான உண்மை தமிழக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் இது கொடுமையாக உள்ளது. பிரச்சனையின்ஆழத்தை புரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.

ஏறுதழுவுதல் பாஜகவின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா உறுப்பினருமான இல.கணேசன் ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்றுசொன்னார். அப்படி நடத்தலாம் என்றே நானும் கருதுகிறேன்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் :

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலிருந்து வந்துள்ள அறிவிப்பு வேதனைஅளிக்கிறது. பொங்கல் வாழ்த்து வர வேண்டிய நேரத்தில் துயரச் செய்தி வந்துள்ளது.மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஜனநாயகம் இருக்க வேண்டும்.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான முயற்சிகளை மத்திய அரசுஎடுத்திருக்க வேண்டும். மாநில அரசும் தக்க நேரத்தில் முறையாக அது நடப்பதற்குவலு சேர்த்திருக்க வேண்டும். இது வேதனை தருவதாக உள்ளது. ஒரு பக்கம்விவசாயிகள் வறட்சியில் வாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாரம்பரியவிளையாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இதில் உள்நோக்கம் உள்ளதா என்றசந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டி யது உரியவர்களின்கடமையாகும்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

உச்சநீதிமன்றம் தமிழக மக்களுக்கு ஆதரவான தீர்ப்பளிக்கும் என்றுநம்பியிருந்தோம். மத்திய அமைச்சர் மிகத் தெளிவாக அதைக் கூறியிருந்தார். நீதித்துறையின் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  மீண்டும் உச்சநீதிமன்றத்தில்கருத்துக்களை எடுத்து வைப்பது குறித்து ஆராயப்படும்.

நீதித்துறை மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கவேண்டும். உயிர்போகும் பிரச்சினையில் உடனடியாக தீர்ப்பளிக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து தீர்ப்பு அளிப்பதால் எந்த பிரயோஜன மும் இல்லை. நீதிபதிகள் இதை உணர வேண்டும் . உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவசர சட்டம் உள்ளிட்ட மத்திய அரசு என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அது அடிபட்டுப் போகும்.  தீர்ப்பு வரும் முன் அவசர சட்டம் கொண்டுவர இயலாது என மத்திய அரசும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட நானும் தயார்.  ஆனால் மத்திய அமைச்சர் என்பதால் போராட முடியாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

உச்சநீதி மன்றத்தில் இன்றைய தீர்ப்பு காரணமாக இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.