டெல்லி:

6 மாத சிறைதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் மோதல் போக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடைபிடித்து வந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினனர். இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாக சென்னையில் தேடுதல் வேட்டை நடத்தினர். அவர் தலைமறைவாக இருப்பதால் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி கர்ணனின் இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் வழக்கில் மேல் முறையீடுக்கு வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.