டெல்லி: மொஹரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதன் காரணமாக மத நிகழ்ச்சிகளுக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. இந் நிலையில், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த சையது கல்பே ஜாவத் என்பவர் இந்த மனுவை  தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மொஹரம்  ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. நீதிபதி எஸ்.ஏ பாப்டே கூறுகையில்,  ஒரு குறிப்பிட மத ஊர்வலத்திற்கு அனுமதி தருவது குழப்பத்தை ஏற்படுத்தும்.

கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை குற்றம்சாட்டுவார்கள்.  நீங்கள் பூரி ஜெகன்நாத் யாத்திரையை சுட்டிக்காட்டுகிறீர்கள். அந்த யாத்திரையானது ஒரு குறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட பாதை வழியாக சென்றது. ஆனால், நீங்கள் நாடு முழுவைக்கும் பொதுவாக அனுமதி கேட்கிறீர்கள்? ஒரு இடத்திற்கு மட்டும் நீங்கள் கேட்டால், அதன் அபாயம் பற்றி மதிப்பீடு செய்ய முடியும் என்றார்.