டெல்லி: அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
கொரோனா தொற்று காரணமாக அமர்நாத் புனித யாத்திரைக்கு நாள் ஒன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் இந்த யாத்திரையின் போது விதிக்கப்பட்டுள்ளன.
வரும் 21ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்கப்படவுள்ளது. 16 கி.மீ.  தொலைவு கொண்ட பல்தால் வழிப்பாதை மட்டுமே அமர்நாத் யாத்திரைக்காக திறந்து விடப்படும்.
பாகல்கம் பாதை பனியால் மூடப்பட்டு உள்ளதால், அந்த பாதை திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 23ம் தேதி தொடங்க வேண்டிய யாத்திரை கால தாமதமாக தொடங்குகிறது.
இந் நிலையில் அமர்நாத் யாத்திரையை ரத்து செய்ய கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  யாத்திரையை நடத்துவது அப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பணியாகும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா சூழலில் நிகழ்ச்சிகளை நடத்துவதை உள்ளூர் அமைப்புகள் திறம்பட கையாளும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.