மறைந்ததமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழியும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

கர்நாடகா ஆச்சாரியா சில வாதங்களை வைத்திருந்தார். அவரிடம் நீதிபதி, “தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முதல்வராக பொறுப்பேற்க சசிகலா தயாராகிவரும் நிலையில், இந்த  அறிவிப்பு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.