சூரத்:

குஜராத் மாநிலம் சூரத்தில் சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.

சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. இது குறித்து குஜராத் மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹர்சயாய் குர்ஜார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளானர். ராஜஸ்தான் கங்காபூர் பகுதியை சேர்ந்த இவரிடமும், இவரது சகோதரர் ஹர்சின், நரேஷ், அமர்சின் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சூரத்தில் உள்ள மார்பிள் தொழிற்சாலையின் கான்ட்ராக்டரான ஹர்சயாய் சிறுமியையும், அவரது விதவை தாயையும் ரூ.35 ஆயிரம் கொடுத்து இவர்களின் உறவினரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இருவரையும் அடிமைத் தொழிலாளர்களாக அடைத்து வைத்து வேலை வாங்கியுள்ளார்.

மார்ச் 20-ம்தேதி தாய் காணாமல் போனார். அதன் பின்னர் சிறுமியை தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்த ஹர்சயாய், ஏப்ரல் 5-ம் தேதி கொலை செய்து சடலத்தை புதரில் வீசியது போலீஸ் விசாரணையில்தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் ஒரு பெண்ணின் உடல் ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அது சிறுமியின் தாயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பிடிபட்டுள்ள ஹர்சாய் குமார் தாயையும், சிறுமியையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்க தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. குறிப்பாக சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் உரையாடல்கள் கை கொடுத்துள்ளது. அதோடு அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் உதவி செய்துள்ளனர்.