நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் வேல்முருகன், ரியோ ராஜ், கேப்ரியலா மூவரும் போட்டியிட்டனர். இதில் ரியோ, வேல்முருகனுக்கு பெருவாரியான ஆதரவு கிடைக்க, கேப்ரியலாவுக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவு அளித்தார். இதையடுத்து அவர்களை யாராவது முதுகில் உப்புமூட்டை சுமக்க வேண்டும் என பிக்பாஸ் கட்டளை இட்டார்.
சுரேஷ் வயதானவர் என்பதால் அவர் முதுகில் ஏற கேப்ரியலா தயங்கினார். எனினும் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேபி இறங்கி விட்டார்.வேல்முருகன் மீது கைவைத்திருந்த ரேகா தெரியாமல் கையை எடுத்ததால் ரியோ ராஜ் வரும் வாரத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆரி, பாலாஜி இருவரும் 1 மணி நேரம் தாக்கு பிடித்தனர். அதே நேரம் சுரேஷும் 8.41 நிமிடங்கள் இந்த போட்டியில் நீடித்தார்.