துபாய்: ஐபிஎல் தொடரில்கலந்துகொள்ள வீரர்கள் அனைவரும் துபாய் சென்றிருந்த நிலையில்,  சிஎஸ்கே நட்சத்திர வீரரும்,  சின்ன தல என ரசிகர்களால்  அழைக்கப்படுபவருமான சுரேஷ் ரெய்னா,  திடீரென ஐபிஎல்டி20 தொடரிலிருந்து முற்றிலு ம் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை  சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாகஅதிகாரி காசிவிஸ்வநாதன் டிவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே  சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவதாக கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி  அன்று அறிவித்த சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அணி வீரர்களுடன் துபாய் சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் திடீரென நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை வெளியிட்டுள்ள டிவிட்டில், தனிப்பட்ட காரணங்களால் சுரேஷ் ரெய்னா,  13-வதுஐபிஎல் டி20 தொடரில் முழுமையாக விளையாடமாட்டார். இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் சிஎஸ்கே அணி முழுமையாக வழங்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அனுபவ வீரரான ரெய்னா அணியில் இல்லாதது இந்த முறைய சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பாகவும், பின்னடைவாக கருதப்படுகிறது. சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.