மீபத்தில் நடந்த நடிகை வனிதா, பீட்டர்பால் திருமணம் சர்ச்சையானது. லட்சுமி ராமகிருஷ் ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி, டைரக்டர் நாஞ்சில் விஜயன் இதுகுறிஹ்து விமர்சித்தனர்.
நடிகர் வனிதா போலீஸில் புகார் செய்ய அதன் பேரில் சூரியா தேவியை போலீஸார் கைது செய்து பிறகு ஜானீனில் விடுத்தனர். சூர்யா தேவிக்கு கொரோன ர்ஹொரு ஏற்பட்டது.


சூரியா தேவி யூ டியூபில் ஒரு வீடியோ வெளி யிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அண்ணா வணக்கம், எஸ்வி,சேகரண்ணா நீங்களும் நானும் .மீட் பண்ணியிருக் கோம்.ஞாபக மிருக்காண்ணா. ரெண்டு வருஷத்துக்கு முன்னால தமிழிசை சவுந்தரராஜன் அக்காவை நான் ரொம்ப ஆபாசமா பேசினேன்னு சொல்லி எனக்கு தண்டனை கொடுத்தாங்க.. தண்டனை அனுபவிச் சுட்டு உள்ள போயிட்டு வெளிய வந்துடேன். வந்த பிறகு நான் கையெழுத்து போட்டுட்டு இருக்கும் போதுதான் உங்கள பார்த்தேன் ஒரு பிரச்னையில கோர்ட்ல ஒரு வழக்குல உங்களுக்கு மட்டும் முன் ஜாமின் கொடுத்தாங்க. உங்களுக்கு மட்டும் சீக்கிரம் கொடுத்துட்டாங்க எனக்கு ஜாமினே கொடுக்கல. பெரிய லெவல்ல என்னய பிடிச்சுப் போட்டுட் டாங்க. நான் ஒரு சாதாரண பொண்ணு.. இப்ப பாருங்க.. உங்களுக்கு அப்பதான் தெரிஞ்சிருக்கும் என்னோட பேக்கிரவுண்டெல்லாம் என்னன்னு.

நீங்க ஒரு நாடகத்துல வனிதா அக்காவுக்கு நெருக்கமா மெட்டி போட்டீங்க அதெல்லாம் தப்பு கிடையாது.நானும் அவனும் (நாஞ்சில் விஜயன்) போட்டோவுல கையில் வாசிருக்கறது ஜூஸின்னு தெரியலயாம், சரக்குன்னு தெரியலயாம். நீங்க செலபிரிட்டியா இருந்து போட்டோ எடுத்தா தப்பு கெடயாது. நான் ஒரு சாதாரண பொண்ணா செலப்ரட்டியா இருந்த அந்த பையனோட போட்டா எடுத்தா ரொம்ப பெரிய்ய தப்பு. அவனுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலண்ணா. இது எந்த விதத்துல நியாயம் சொல்லுங்க.  உங்கள் எனக்கு தெரியும் நான் பாத்திருக்கேன்.. .அண்ணா, உங்களை நான் கோர்ட்ல பார்த்திருக் கேன். நீங்க வரும்போது 10, 15 வக்கீலோட வந்தீங்களா அப்பவே எனக்குத் தெரியும் நீங்க பெரிய ஆளுன்னு.. எனக்கு முன் ஜாமின் வேணும்.. என்னய கூட நீங்க பாத்தீங்க எனக்கு இந்த ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணிக் கொடுங்கண்ணா,
என் வீட்டு வாசலை அடைச்சுட்டாங்க பிளீஸ்னா.. என்னால வீட்டுக்கும் போக முடியலை.. தமிழ் நாட்டுலயே சூரியாதேவி வீட்டை மட்டும் வாசலையே அடைச்சுட்டாங்கண்ணா.. பார்த்தீங் களா, எவ்வளவு பெரிய கொரோனான்னு. எனக்கு முன் ஜாமின் வேணும்.. எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.. எனக்காக இந்த உதவி மட்டும் பண்ணிக் கொடுங்கண்ணா.

இவ்வாறு வீடியோவில் கூறி இருக்கிறார்.