சென்னை:

மிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் இறுமாறுதல் கலந்தாய்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அதனப்டி கலந்தாய்வு ஆகஸ்டு 28ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில்  பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் 19 ஆயிரம்  பட்டதாரி ஆசிரியர்களை வேறு இடங்களுக்கு மாறுதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும்  52 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 13 ஆயிரம் இயங்குகின்றன. மொத்தமுள்ள பள்ளிகளில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், பல பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்களை அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதை கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு முதல் மாவட்ட வாரியாகவும், பாட வாரியாகவும் பணியில் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார். அந்த பட்டியலின்படி,   சில மாவட்டங்களில் மட்டும் 13 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.

தையடுத்து, விதிப்படி ஒவ்வொரு பாடத்துக்கும் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் போக உபரியாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது.

துறை ரீதியாக உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்க முடிவு செய்யதுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதவாது,

பள்ளிக் கல்வி இயக்ககத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களில் உபரி ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த பட்டியலின் அடிப்படையில், வரும் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் அந்தந்த மாவட்டத்துக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் மூலம் இணைய தளம் வழியாக கவுன்சலிங் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.