புதுடெல்லி: மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார், இந்தியாவின் டி வில்லியர்ஸாக திகழ்கிறார் என்று புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன்சிங்.

இவரை, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் சேர்க்காதது குறித்து, ஏற்கனவே கேள்வி எழுப்பியவர் ஹர்பஜன் சிங்.

ஐபிஎல் தொடர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், மேலும் பேசியுள்ள ஹர்பஜன் சிங், “தன்னைத்தானே மாற்றியமைத்துக் கொண்டுள்ள சூர்யகுமார், ஒரு கேம் சேஞ்சிங் ஆட்டக்காரர் என்றால் அதில் சந்தேகமில்லை.

பேட்டிங்கில் அதிக பொறுப்புடன் செயல்படும் சூர்யகுமார், மும்பை அணியின் முன்னணி வெற்றி வீரராக உருமாறியுள்ளார். முதல் பந்திலிருந்தே அடித்து விளையாடும் இவரை, கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

இவரை, இந்தியாவின் டி வில்லியர்ஸ் என்று அழைக்கலாம். இவரை இந்திய அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனாலும், வெகுவிரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார்” என்றுள்ளார் ஹர்பஜன்.