டிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க கே.வி.ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார். செல்வராகவன் படத்தை அடுத்து 37வது சூர்யாவின் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க உள்ளார்.

நடிகர் சூர்யாவின் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் இந்த பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படம் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ள ஸ்பெஷ்ல் 26ன் மொழி மாற்றி தயாரிக்கப்பட்ட படமாகும்.

அதைத்தொடர்ந்து, சூர்யாவின் 36வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக   ராகுல் ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

அதையடுத்து, சூர்யாவின் 37வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர்  கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவான ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’  படங்களை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.