தற்போது வரை கொரோனாவால் இந்தியாவில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு குறையும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்டையே, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. நேற்றுவரை, கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக இருந்தது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்

இதனைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். அதே போல் குழந்தைகளின் திறமையை வீடியோ எடுத்து அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் இயக்குநர் சேரன். அதனைத் தொடர்ந்து மரக்கன்று நடக்கூறி இயக்குநர் சுசீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.