கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த வாரம் மும்பையில் தனது வீட்டில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை, சகோதரிகள். காதலி, நண்பர்கள் என 23 பேரிடம் போலீசார் இதுவரை விசாரணை நடத்தி உள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை மற்றும் மூன்று சகோதரிகள்; அவரது நண்பரும், மேனேஜருமான சித்தார்த் பிதானி, கேசவ், சமையல்காரர்; முகமது ஷேக், காவலாளி; காவலாளி சகோதரர் ஷகீல் உசேன்;


உதய் சிங் கவுரி, வணிக மேலாளர்; ராதிகா நிஹலானி, பிஆர் மேலாளர்; சுஷாந்தின் முதல் சீரியலின் இயக்குனரான குஷால் சவேரி, நடிகை ரியா சக்ரவர்த்தி, முகேஷ் சாப்ரா மற்றும் ஆடிட்டர் சஞ்சய் ஸ்ரீதர் உள்ளிட்ட 23 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதில் இன்னும் சில மர்ம முடிச்சுகள் உள்ளதாக போலீஸார் சந்தேகப்படு கின்றனர். எனவே விசாரணையை பல கோணங்களில் நடத்தி வருகின்றார்கள். மேலும் சுஷாந்த் குடியிருந்த குடியிருப் பின் சி.சி.டி.வி வேலை செய்து வருவதாக வும் அதன் புட்டேஜ் சேகரித்திருப்ப தாகவும் தெரிவித்துள்ள போலீஸார் சுஷாந்த் வளர்த்து வந்த நாய் அதே வீட்டில் மற்றொரு அறையில் உயிருடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.