கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
வாரிசு அரசியலில் தொடங்கிய இந்த சர்ச்சை தற்போது போதைப் பொருள் வழக்கு வரை வந்துள்ளது.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் சகோதரியான ஷ்வேதா சிங் தனது சமூக வலைதளக் கணக்குகளை யாரோ ‘ஹேக்’ செய்ய முயல்வதாக கூறி அவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மன்னிக்கவும். என்னுடைய சமூக வலைதளக் கணக்குகளை யாரோ சிலர் பலமுறை லாகின் செய்ய முயன்று வருகின்றனர். இதனால் அவற்றிலிருந்து விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.