திருச்சி:

னைவியின் செல்போன் பேச்சுக்கள் குறித்து கணவன் சந்தேகம் அடைய… மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி இனமாத்தூரைச் சேர்ந்த வேலுச்சாமி (30) மற்றும் ஐஸ்வர்யா (21) ஆகிய இருவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலுச்சாமி தனது வேலை தொடர்பாக வெளியூர் சென்றிந்தார். அவர் திரும்பி வந்த நேரத்தில் ஐஸ்வர்யா யாருடனோ செல்போனில் பேசுவதைக் கண்டு சந்தேகமடைந்தார். அதுபற்றி விசாரித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா,  தன் அம்மாவுடன் பேசியதாக தெரிவித்துள்ளார். போனைத் தரும்படி கேட்டதற்கு, அவசர அவசரமாக அழைப்புப் பதிவுகளை அழித்துவிட்டு அளித்துள்ளார்.  இதனால், வேலுச்சாமி மேலும் சந்தேகமடைந்தார்.

இதையடுத்து,  இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வேலுச்சாமியின் அண்ணன் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது வேலுச்சாமி, ஐஸ்வர்யாவின் அம்மா அப்பாவை அழைத்து வரச் சொல்லி கூறியுள்ளார்.

இதற்கிடையே, வேலுச்சாமி வெளியில் சென்ற நேரத்தில்,  ஐஸ்வர்யா வீட்டை உட்புறமாக பூட்டிக் கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.