சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் சுவாதி கொலை செய்யப்பட்டது முதல் நேற்று இரவு பத்து மணிக்கு குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது வரை இந்த வழக்கில் நடந்த சம்பவங்களைப் பார்ப்போம்.

download (1)
ஜூன் 24ம் தேதி  
● காலை  6.15 மணியளவில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், சுவாதியை பைக்கில் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றார்.
● சுமார் 6:30 மணியளவில், ரயில் நிலைய பிளாட்பாரத்தில்  சுவாதியை  மர்மநபர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்.
● ரயில் பயணிகள் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சில பயணிகள் கொலையாளியை துரத்திச் சென்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை.
● ரயில்வே நடைபாதை வழியாக ஓடிய கொலையாளி அங்கிருந்த சுவர் வழியாக குதித்து தப்பிச்சென்றான்.
●  கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடல் சுமார் இரண்டரை  மணி நேரமாக நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்திலே கிடந்தது.
● ஒன்பது மணிக்கு பிறகே ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவல் துறையினர் உடலை அப்புறப்படுத்தினர்.
● சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் சில மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜூன் 25ம் தேதி  
● நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
● ரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில் சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது.
● காவல்துறையினர் அந்த நபர் தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களுக்கு வெளியிட்டனர்.
ஜூன் 26ம் தேதி 
● நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சௌராஷ்ரா நகரில் உள்ள மற்றொரு வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
● இரண்டாவது வீடியோவை வெளியிட்ட போலீசார், இது கொலையாளியின் மற்றொரு வீடியோ என்று தெரிவித்தனர்.
● ஆனால் இரண்டு வீடியோவிலிருந்த நபர்களிடையே பெரும் வித்தியாசமிருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

  • நகரத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
    ஜூன் 27ம் தேதி
    ● மூன்று நாட்களாகியும் துப்பு துலங்காததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே போலீசார் திணறினர்.
    ● சுவாதி கொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடமிருந்து சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
    ● கொலையாளியை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சுவாதியின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை.
    ● சுவாதியின் அலைபேசி உரையாடல்கள், அலைபேசி எண்களை போலீசார் சேகரித்தனர். விசாரணையில் துன்புறுத்தியதாக சுவாதியின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார்.
    ● மு.க. ஸ்டாலின், குஷ்பு, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், தமிழிசை ஆகியோர் சுவாதி பெற்றோரை சந்தித்தால் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது சுவாதியின் கொலை.

ஜூன் 28ம் தேதி
● சுவாதி கொலையாளியை கண்டுபிடிக்க முடியாததால் போலீசாருக்கு  பலதரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
● தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்.
● இரண்டு நாட்களுக்குள் வழக்கில் முன்னேற்றமில்லை என்றால், நீதிமன்றமே விசாரணையை நடத்த நேரிடும் என எச்சரிக்கை.
● சுவாதி குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என அவரின் தந்தை வேண்டுகோள் விடுத்தார்.
ஜூன் 29ம் தேதி
● சுவாதியின் பேஸ்புக் முடக்கப்பட்டது. .
● செங்கல்பட்டு பரனூர் அருகே கொலையாளி மறைந்திருப்பதாக தகவல் பரவியது சிசிடிவியில் பதிவான மாதிரி புகைப்படத்தை வைத்து பரனூரில் வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை .
ஜூன் 30ம் தேதி
● தெளிவான புகைப்படம் என்று நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் ஓடிய நபரின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டனர் காவல்துறையினர்.

  • சுவாதி செல்போன் கடைசியாக சூளைமேட்டில் சிக்னல் பகுதியில் இரண்டரை மணி நேரம் உயிர்ப்புடன் இருந்ததாக போலீசார் தகவல்.
    ● கொலையாளி தங்கியிருந்த மேன்சனில் போலீசார் தீவிர விசாரணை.
    ● அருகிலுள்ள மேன்சன் காவலாளி மற்றும் மேலாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் நெல்லை பயணம். குற்றவாளியை நெருங்கி விட்டதாக சென்னை மாநகர காவல்ஆணையர் பேட்டி.
    ஜூலை 1ம் தேதி
    ● செங்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல்.  காலை முதல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த குற்றவாளியை  காவல்துறையினர் நோட்டமிட்டுள்ளனர்.
    ● ஆடு மேய்த்து விட்டு மாலை வீடு திரும்பினார் கொலையாளி ராம்குமார்.
    ● இரவு வரை காத்திருந்த போலீசார் 10 மணியளவில் ராம்குமாரை கைது செய்ய முயன்றனர்.
    ● காவல்துறையினரை கண்டவுடன் பிளேடால்  தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் ராம்குமார்.
    ● ராம்குமாரை கைது செய்த போலீசார், அவரை சிகிச்சைக்காக செங்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    ● பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்த்தனர். தான்தான் கொலை செய்ததாக ராம்குமார் காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம்.
    ● தற்கொலைக்கு முயன்றதால் ராம்குமார் கழுத்தில் 18 தையல் போடப்பட்டுள்ளது.