மாற்றுத்திறனாளிக்கான சுயம்வரம் தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில்  வரும்  16.09.2017  – சனிக்கிழமை அன்று நடக்க இருக்கிறது.

பாதிரியார் கிரேசிஸ்

இது குறித்து பாதிரியார் கிரேசிஸ் நம்மிடம் தெரிவித்ததாவது:

“அன்று  காலை 9.00 மணி முதல்  சுயம்வரம் நடைபெறும். இந்த சுயம் வரத்தில் கலந்துகொள்பவர்கள் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும், பெண்கள்  18 வயதும்  ஆண் 21 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். மற்றபடி சாதி, மதம், சாதி, இனம்  எந்த வேறுபாடும் கிடையாது.

இதில் கலந்துகொள்பவர்கள், கொண்டுவரவேண்டியவை:

1.மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்(2)

2. முழு புகைப்படம் குடும்பத்துடன்(2)

3. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்(2)

4. குடும்ப அட்டை நகல் ரேசன் கார்ட்(2)

5. சுயவிபரம் Bio Data(2)

இடம் : புனித லூசியா இல்லம், சில்வர்புரம், மீளவிட்டான் அஞ்சல், தூத்துக்குடி.

மேலும் விபரம் அறிந்துகொள்ள 8124132839 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்” என்று பாதிரியார் கிரேசிஸ் தெரிவித்தார்.