மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில்  வண்டியூரை சேர்ந்த வேல்முருகன்  என்பவர்  தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று,  வேல்முருகன் மதுரை ஆட்சியர் அலுவலக மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் காவல்துறையினர் விரைந்து வந்து, வேல்முருகன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து வேல்முருகன் தற்கொலைக்ககான காரணம் குறித்து,  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் வேல்முருகன் தற்கொலைக்கொண்டாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி அலுவலக மொட்டை மாடியில், துப்புறவு பணியாளர் தற்கொலை செய்துகொண்ட விவரகாரம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.