குருக்ராம்:

கடந்த ஆண்டு நவராத்திரி விழாவின்போது, கையில் வாள் போன்ற ஆயுதங்களுடன் வந்து மிரட்டி இறைச்சிக் கடைகளை மூட வைத்த இந்து சேனா அமைப்பினரின் அடாவடி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


கடந்த நவராத்திரி விழாவின் போது 9 நாட்களும் இறைச்சி விற்க தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் இந்து சேனா அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், குருக்ராமில் உள்ள தன்டஹ்ரா வீதிகளில் இந்து சேனா தொண்டர்கள்,கையில் வாளுடன் சென்று இறைச்சிக் கடைகளை மூடுமாறு மிரட்டினர்.

ஒவ்வொரு குழுவிலும் 250 பேர் இடம்பெற்றனர். இந்த குழுவினர் தனித்தனியே சென்று இறைச்சிக் கடைகளை மூடுமாறு மிரட்டனர். சிலரை தாக்கினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ல் பாதிக்கப்பட்ட 55 வயது தாஹிர் குரேஷி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக பதில் அளித்துள்ள போலீஸார், இது குறித்து  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.