மும்பை: சையது முஷ்டாக் அலி டி-20 தொடரின் லீக் போட்டியொன்றில், கேரளாவை 6 விக்கெட்டுகளில் வென்றது ஆந்திர அணி.

பிசிசிஐ அமைப்பு நடத்தும் உள்ளூர் டி-20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் கலந்துகொண்டு, 6 பிரிவுகளாக மோதுகின்றன.

இதில், ‘இ’ பிரிவில் இடம்பெற்ற கேரளா மற்றும் ஆந்திர அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆந்திர அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய கேரள அணி, 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே அடித்தது. அந்த அணியின் சச்சின் பாபி 51 ரன்களை அதிகபட்சமாக அடித்தார்.

இந்நிலையில், எளிய இலக்க‍ை விரட்டிய ஆந்திர அணிக்கு, துவக்க வீரர் அஸ்வின் ஹெப்பார் 48 ரன்கள் அடித்து கைக்கொடுத்தார். அம்பதி ராயுடு 38 ரன்களை அடிக்க, 17.1 ஓவர்களிலேயே, ஆந்திர அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 113 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.