நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் நடிகைகளில் டாப்ஸி பானுவும் ஒருவர்.

ஆண்டுக்கு நான்கு படங்களை அவர் கொடுத்து வருகிறார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு நான்கு சினிமாக்களில் நடித்து முடித்து விட்டார்.

இப்போது அனுராக் காஷ்யப் டைரக்டு செய்யும் ‘டோ பாரா’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

அண்மையில் டாப்ஸி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அனுராக் நடத்திய பட நிறுவனம். வரி ஏய்ப்பு செய்ததால், டாப்ஸி இல்லத்தில் சோதனை நடந்ததாக கூறப்பட்டது.

ஆனால் மத்திய அரசை விமர்சனம் செய்து டாப்ஸி, தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வருவதால், சோதனை நடந்ததாக ஒரு பேச்சு உலவுகிறது.

இது குறித்து டாப்ஸி என்ன சொல்கிறார்? அவரது விளக்கம்:

“நான் நேர்மையாளவள். அதனால் எனக்கு அச்சம் கிடையாது. எனக்கு பொய் சொல்லவும் தெரியாது.

ஏதோ நடந்தது. எதனால் நடந்தது என தெரியவில்லை.

எனது மனதுக்கு தோன்றுவதை பதிவு செய்கிறேன். யாரையும் நான் காயப்படுத்தியது இல்லை” என்கிறார், டாப்ஸி.

– பா. பாரதி