சென்னை:

ந்தமானில் சிக்கி தவிக்கும் 350 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடிக்கு தேமுதிக தலைவர்  விஜயகாந்த கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8-க்கும் அதிகமான மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் அந்தமானில் சிக்கி தவித்து வருகின்றனர். தங்குவதற்கு இடவசதி, உண்ண உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் தங்களை மீட்டு தாயகம் அழைத்து செல்ல வேண்டும் என கேட்டு கொண்டனர். எனவே தமிழக அரசு, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை தனி விமானித்திலோ அல்லது அவர்கள் படகிலேயே தமிழகம் வருவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டு கொள்கிறேன்.
மேலும் இதேபோல் அண்டை நாடுகள் மற்றும் மும்பையில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கும் மத்திய- மாநில அரசுகள் உதவி கரம் நீட்டி அவர்களை காத்திட வேண்டும்.

இவ்வாறு அதில்  கூறியுள்ளார்.