வீட்டுக்கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் பெருமபாலான வங்கிகள் குறைத்துள்ளன. எஸ்பிஐ, ஐசிசிஐ,  எச்டிஎப்சியி போன்ற வங்கிகள் வீட்டுக்கடன்களை  6.7% ஆகக் குறைத்துள்ளது.

கொரோனா தொற்றால் முடங்கிப்போயிருந்த ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகள் மீண்டும் எழுச்சி கண்டுவருகிறது.  வீடுகள் விற்பனை தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், ஏராளமானோர் தனி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள் போன்றவற்றை வாங்குவதில் மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  “கடந்த சில மாதங்களாக, தங்கள் சொந்த நுகர்வுக்காக வீடுகளை வாங்க விரும்பும் நுகர்வோரிடமிருந்து தேவை மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது  வீடுகள் வாங்கு வதற்கு வங்கிகளில் கடன்வாங்கும் நடவடிக்கையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பல வங்கிகள் வீட்டுக்கடன்மீதான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) கடந்த வாரம் வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைத்தைத் தொடர்ந்து, கோட்டக் மஹிந்திரா வங்கியும் குறைத்தது,  இந்த வார தொடக்கத்தில், எச்.டி.எஃப்.சி அவர்களின் வீட்டுக் கடன் விகிதங்களைக் குறைத்து நிலையில், தற்போது ஐசிஐசிஐ வங்கியும் வீட்டுக்கடன் மீதான வட்டியை விகிதத்தை குறைத்துள்ளன.

ஐசிஐசிஐ வங்கி

தனியார்துறை வங்கியான  ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதன்படி, ரூ.  75 லட்சம் வரை வீட்டுக் கடன்களுக்கு 6.7% வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர்கள் கடன்கள் பெறலாம். ரூ .75 லட்சத்துக்கு மேல் கடன்களுக்கு, வட்டி விகிதங்கள் 6.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய  திருத்தப்பட்ட வட்டி விகிதம் – வங்கியின் 10 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்றும், இந்த வட்டிவிகிதம் இன்றுமுதல் (மார்ச் 5ந்ததி) அமலுக்கு வருவதாகவும், இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மார்ச் 31, 2021 வரை கிடைக்கும் என்றும், வாடிக்கையாளர்கள் கடன்கள் வாங்க இதுவே சரியான தருணம் என  அந்நிறுவனத் தலைவர் ரவி நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.சி.ஐ.சி வங்கி, அதன் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் உட்பட வீட்டை வாங்குபவர்கள் வங்கியின் வலைத்தளம் மற்றும் மொபைல் வங்கி தளமான ஐமொபைல் பே மூலம் டிஜிட்டல் முறையில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கி

ஏற்கனவே மார்ச் 3 ஆம் தேதி முதல் எச்டிஎஃப்சி வங்கியும் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்தது. அதன்படி  மார்ச் 4 முதல் அனைத்து சில்லறை வாடிக்கை யாளர்களுக்கும் வீட்டுக் கடன் விகிதங்களை ஐந்து அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. . ஒரு அடிப்படை புள்ளி ஒரு சதவீத புள்ளியின் நூறில் ஒரு பங்கு ஆகும். எச்.டி.எஃப்.சி தனது சில்லறை பிரதம கடன் விகிதத்தை (ஆர்.பி.எல்.ஆர்) குறைத்தது, அதன் அனுசரிப்பு விகிதம் வீட்டுக் கடன்கள் 5 அடிப்படை புள்ளிகளால் தரப்படுத்தப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி,  எச்.டி.எஃப்.சி சில்லறை வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில்  6.75 சதவீதம் அடிப்படையில் கடன்களை அளிக்கும் என அறிவித்து உள்ளது.

எஸ்பிஐ வங்கி

நாட்டின் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி,  தனது வீட்டுக் கடன் விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்தது. கடன் வழங்குபவர் தனது வாடிக்கையாளர்களுக்கான செயலாக்க கட்டணத்தையும்  (பிராசசிங் பீஸ்) தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளது. எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ரூ .75 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.70 சதவீதத்திலிருந்து ரூ .75 லட்சத்துக்கு மேல் 6.75 சதவீதத்திலிருந்து தொடங்குகின்றன என்று வங்கி தெரிவித்துள்ளது.

கோட்டக் மஹிந்திரா வங்கி

தனியார் துறை வங்கியான  கோட்டக் மஹிந்திரா வங்கியும் சமீபத்தில் அதன் கடன் விகிதங்களை குறைத்தது. வீட்டுக் கடன் விகிதங்களை 6.65 சதவீதமாகக் குறைத்தது.

இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வங்கிகளின் கடன் விகிதங்களைக் குறைக்கத்  வலியுறுத்திய நிலையில், முக்கிய கடன் விகிதமான ரெப்போவை பிப்ரவரி 2019 முதல் 250 பிபிஎஸ் குறைத்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது பல வங்கிகள் வீட்டுக்கடன்மீதான வட்டி விகிதங்கள் குறைக்கத்தொடங்கி உள்ளன.