கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த தமன்னா: நமது பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் தேசிய அளவில் ஊரடங்கு அறிவித்துள்ளார். கரோனாவை எதிர்க்கச் சிறந்த வழி. நமது உயிர்களை விட வேறெதுவும் முக்கியமல்ல. நானும் என் குடும்பத்தினரும் வீட்டிலேயே இருக்கிறோம். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..என பதிவிட்டுள்ளார் .