கொரோனா ஊரடங்கில் புதிதாக தெலுங்கில் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கவுள்ளார் தமன்னா.
தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் ஓடிடி தளமொன்றைத் தொடங்கியுள்ளார்.
இதில் வெளியிட பல்வேறு படங்களின் டிஜிட்டல் உரிமையையும் கைப்பற்றி வருகிறார். இதில் புதிதாக வரவுள்ள நிகழ்ச்சிக்குத்தான் தமன்னாவைத் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கு ஒரு எபிசோடுக்கு சம்பளம் என்ற முறையில் தமன்னாவுக்குச் சம்பளம் வழங்கப்பட உள்ளது.