கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

அந்த வகையில், தற்போது சூர்யாவின் கஜினி, தனுஷின் சுள்ளான் படங்களை தயாரித்த சேலம் சந்திரசேகர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் பிப்ரவரி 14, சபரி, கில்லாடி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.