சென்னை:

கைச்சுவை நடிகை கோவை சரளா, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழ் காமெடி நடிகைகளில், ஆச்சி மனோரமாவுக்கு பிறகு, தனக்கென தனி இடத்தை பிடித்திருப்ப வர் கோவை சரளா. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள கோவை சரளா பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி, கமல்ஹாசனுடன் சதி லீலாவதி படத்தின் ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

பொதுவாக தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத கோவை சரளா, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இதுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலில் முதல் காலடியை எடுத்து வைத்துள்ளார்.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் பெண்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை சரளா கலந்து கொண்டு, கமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு கமல்ஹாசன் மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, கட்சி செயற்குழு உறுப்பினர்கள் கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பெண் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.