சென்னை:
மிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருடைய சளி மாதிரிகளை பரிசோதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பழ.நெடுமாறன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பழ.நெடுமாறன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பழ.நெடுமாறன் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” தமிழ்ப்பேரினத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பெருமதிப்பிற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவரும் செய்தியறிந்தேன். ஐயா முழுமையான உடல்நலம்பெற்று மீண்டும் இனமானப்பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என இவ்வாறு சீமான் பதிவிட்டுளளார்.