சென்னை:

மிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மே7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவி இன்றுடன் முடிவடையும், தமிழக அரசு சங்கத்தை நிர்வகித்த தனி அதிகாரியை நியமித்து, சங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் தலைமையிலான நிர்வாகிகள் நிர்வகித்து வருகிறார்கள் இவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.தேர்தல் தேதியை தீர்மானிக்கவும் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் வருகிற மே 1ம் தேதி பொதுக்குழு கூட ஊளுளுத.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க என்.சேகர் என்ற அரசு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. இது திரைப்பட தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம் என்றும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு, இந்த வழக்கு தொடர்பாக மே 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்