சென்னை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக‌ கூறி  மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர்.

இதேபோல்‌ ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த, 9 மீனவர்‌களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்களைக் கண்டித்து மீனவர் சங்க பிரநிதிகள் தலைமையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.