கோவை:

தமிழகத்தில் வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூன் 17ந்தேதி மாலை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், ஏராளமான மாணவ மாணவிகள், வேளாண் படிப்புக்கு  விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுவதால், அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படுவதாக  வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

வேளாண் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 17ஆம் தேதி கடைசி நாள் என்றும்,. அதையடுத்து, ஜூன் 22ந்தேதி  தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்கட்ட இணையவழி கலந்தாய்வு ஜூலை 9ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதள லிங்கை கிளிக் செய்யவும்

https://tnauonline.in/