சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20, 21ந்தேதிகளில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில்  பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. திமுக, அதிமுக சார்பில், கட்சித் தலைவர்கள் ஏற்கனவே தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வரின் 2 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் குறித்து, அதிமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, வரும் 20, 21ந்தேதிகளில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து உள்ளது.