சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் மாதம் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி வாக்குகள்  எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தாெடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும்  தேர்தல் நடைமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று  மதியம் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான பாஜக., காங்கிரஸ்., அதிமுக, திமுக, இந்திய தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுஐமயாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படும் என தெரிகிறது.