(பட்ஜெட் வாசிக்கும் ஓபிஎஸ் – பைல் படம்)

சென்னை:

மார்ச் 15ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல்கூட்டம் ஜனவரி 8ந்தேதி ஆளுநர் உரையுடன்  தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற அந்த கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 15ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஒபிஎஸ், தமிழக அரசின் 2018- 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் வரும் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

கடந்த ஆண்டு அதிமுக இரு அணிகளாக இருந்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் அணிகள் இணைந்தபிறகு, ஓபிஎஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.