சேலம்:

முதல்வர் எடப்பாடியின் புகைப்படக்காரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படக்காரர் சுப.மோகனுன் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது . இதில் அவருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்   சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் நிகழ்ச்சிகளை படம்பிடிக்கும் இவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார். மேட்டூர் திறப்பு உள்ளிட்ட முதல்வர் நிகழ்ச்சியை படம் எடுப்பதற்காக சேலம் சென்ற இடத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் உள்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர்கள் அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.