சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  அவரக்கு ரசிகர்களும், சக விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 தமிழகத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நடராஜன் சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில், 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றி கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இவருக்கும், பவித்ரா என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள நடராஜன் ஐக்கிய அரபு அமிரகம் சென்றபோது பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், நடராஜன் தம்பதியினருக்கு நேற்று நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து, அவருக்கு விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என  பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.