சென்னை:  தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்கள்,காவல்துறையினர் & சுகாதாரப் பணியாளர்களுக்கு, முககவசம், கிருமிநாசினி, கபசுர குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மேலும், கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களான முககவசம், கிருமிநாசினி, கபசுர குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.