புதுக்கோட்டை:

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தை சேர்ந்த ஒரு படகையும் மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் காரணமாக தமிழக மீனவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.

கோட்டைப்பட்டினம்: நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலுக்குள்  மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.  அவர்கள் கொண்டு சென்ற படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசயத்தில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மவுனம் வந்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 22ந்தேதி  கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.