நெல்லை,

திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஏங்றகனவே சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பொறுப்பு வழங்கபப்ட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக திருநங்கைகள் வாழ்வில் உயர அவர்களுக்கு தேவையான கல்வியை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக நெல்லையில் உள்ள  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் திருநங்கைகளுக்கு  இலவச கல்வி குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.