சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மே 10 முதல் 24 வரை  பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுஉள்ளது.  மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
பொதுமுடக்கம் அறிவிப்பை ஒட்டி, இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.