சென்னை:

மிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் குறைகள் மற்றும் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து  4வது காவல்ஆணையத்தை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

எற்கனவே மறைந்த முதல்வர் கருணாநிதி அட்சியின்போது  3முறை காவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 4வது காவல் ஆணையத்தை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு அமைத்து உள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் நடைபெற்றபோது, காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு நான்காவது காவல் ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த ஆணையத்திற்கு தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியாவை நியமித்து உள்ளது. ஆணையத்தின் உறுப்பினர் களாக வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம், முன்னாள் இணைச் செயலாளர் அறச்செல்வி, ஏடிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சி காலத்தில் 1969, 1989 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் மூன்று காவல் ஆணையங்களை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது 4வது காவல்ஆணையத்தை ,  முதன் முறையாக அதிமுக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.