சென்னை,

காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 149 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலை அலங்கரிக்கப்பட்டது. சிலையின்  கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகார்கள் கலந்துகொண்டு  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக கவர்னரை, ராஜ்பவனில் தமிழக முதல்வர், துணைமுதல்வர் உள்பட அமைச்சரவை சகாக்கள் சந்தித்து அவருக்கு பிரியாவிடை அளித்ததாக கூறப்படுகிறது.