சென்னை:

மிழகத்தில் 3 அரசு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்றைய (07-04-2020) நிலவரப்படி 690 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், 3 அரசு மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களில்  2 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.