சென்னை:
மிழகத்தில் இன்று (14/05/2020) காலை 9 மணி நிலவரப்படி, ஊரடங்கை மீறி வாகனங்களில், செல்வோரிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் 5 கோடியே 43 லட்சத்து 88ஆயிரத்து 379 வசூலாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல்  மே 17ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஏராளமானோர் ஊரடங்கை மீறி பலர் வெளியே வாகனங்களில் சுற்றி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.
அதன்படி இன்று வரை ஊரடங்கை மீறிய வாகனங்கள் எண்ணிக்கை 4,41,888 அவர்கள் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை 3,86,573 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரத்து 513 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ 5,43,88,379. கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.